ஆரோவில் புது சர்ச்சை.. அடித்து சொல்லும் தமிழிசை.. என்ன நடக்கிறது..?

Published : Dec 11, 2021, 04:07 PM IST
ஆரோவில் புது சர்ச்சை.. அடித்து சொல்லும் தமிழிசை.. என்ன நடக்கிறது..?

சுருக்கம்

ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ஆரோவில்லில் இயற்கை எவ்விதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை  தெரிவித்துள்ளார்.  

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதியாரின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சாய் ஜெ. சரவணன்குமார், சபாநாயகர் செல்வம் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பாரதியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அங்கு பாரதியார் பாடல்கள் இசைக்க, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, ஆரோவில் நிர்வாகத்துக்கு அமைக்கப்பட்ட குழுவில் நானும் உறுப்பினராக இருக்கிறேன் என்றும் இயற்கை அழிக்கும் எண்ணம் நிச்சயம் கிடையாது எனவும் கூறினார். மேலும் ஆரோவில் எடுக்கப்படும் மரங்கள், வேறு இடத்தில் நடப்படுகின்றன என்றும் இயற்கை எந்தவிதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிப்பதாக தெரிவித்தார். பின்னர், பாரதியாரின் புகழைப் பாடும் அளவுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் மாளிகையிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாகவும் கூறினார்.

‘தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சொன்னார் பாரதி. அப்படி ஒரு பசுமையான புதுச்சேரியை, பசி இல்லாத புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் ஒரு வளர்ச்சியடைந்த புதுச்சேரியை உருவாக்க கனவு கண்டார். அத்தகைய புதுச்சேரியை உருவாக்க பாரதியின் பிறந்த நாளில் நாம் சபதம் ஏற்க வேண்டும் என்று கூறிய அவர் பாரதியார் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு புதுச்சேரியில் கழித்திருக்கிறார் என்று பெருமைக்கொண்டார். 

மேலும் பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வருடன் ஆலோசனை செய்து இதற்காகக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறேன் என்று கூறினார். வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு இத்தகைய முயற்சியில் நாங்களும் எங்களது பங்கை அளிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்த அவர், பாரதிக்கு ஒரு வானுயர சிலை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். 

ஆரோவில் நிர்வாகத்துக்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தலைவராக தமிழக ஆளுநரும், உறுப்பினராக நானும் இன்னும் மூன்று ஆளுமைகளும் உறுப்பினர்களாக இருக்கிறோம். அன்னை கனவு கண்ட நகரம் 50 ஆண்டுகாலமாக உருவாகவில்லை என்ற எண்ணம் இருக்கிறது. அங்கு இயற்கையை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இல்லை. அன்னை கனவு கண்ட நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இங்கு எடுக்கப்படும் பழமையான மரங்கள் வேறு இடத்தில் நடப்படுகின்றன. இயற்கை எந்தவிதத்திலும் அழியாமல் பாதுகாக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!