என்னை வெச்சி செஞ்சுடீங்க... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹெவியா மெசேஜ் சொன்ன தமிழிசை!

By Asianet TamilFirst Published Sep 3, 2019, 8:49 AM IST
Highlights

ஒரு கட்டத்தில் அவருடைய உருவத்தை வைத்தும் தலை முடியை வைத்தும், உயரத்தை வைத்தும், தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசுவதையும் வைத்து அதிகமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் தமிழிசையை வறுத்தெடுத்தனர். உருவத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகளவில் கிண்டலுக்கு ஆளானவர் தமிழகத்தில் தமிழிசை மட்டுமே.

“என்னை வெச்சு செஞ்சுட்டீங்க. மீம்ஸை அவர்கள்  இனியும் தொடர வேண்டும் என்றால் தொடரட்டும். அதை என் இதயத்துக்குக் கொண்டு செல்ல மாட்டேன்” என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார்.


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வரும் 8-ம் தேதி தெலங்கானா ஆளுநராக அவர் பதவியேற்க உள்ளார். தமிழிசை தமிழகத்திலிருந்து செல்ல உள்ள நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் சோகத்தில் உள்ளார்கள். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹெவியாக கண்டண்ட் கொடுத்தவர் தமிழிசை. அவருடைய பேட்டிகளை வைத்து உடனுக்குடன் மீம்ஸ் வெளியிட்டு கிண்டலடிப்பார்கள்.


ஒரு கட்டத்தில் அவருடைய உருவத்தை வைத்தும் தலை முடியை வைத்தும், உயரத்தை வைத்தும், தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசுவதையும் வைத்து அதிகமாக மீம்ஸ் கிரியேட்டர்கள் தமிழிசையை வறுத்தெடுத்தனர். உருவத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகளவில் கிண்டலுக்கு ஆளானவர் தமிழகத்தில் தமிழிசை மட்டுமே. தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்ட உடனே பல மீம்ஸ் கிரியேட் பக்கங்களை நடத்திவரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வருத்தத்துடன் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு  தமிழிசை ஹெவியான மெசேஜ் ஒன்றை சொல்லியுள்ளார். 
இந்தத் தருணத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று ஆங்கில் நாளிதழ் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருக்கிறார் தமிழிசை. “நான் எப்போதுமே உங்கள் (மீம்ஸ் கிரியேட்டர்) கற்பனை வளத்தை நேர்மறையான விசயங்களுக்கு பயன்படுத்துங்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன். தமிழிசையைக் குறி வைப்பதற்கு பதிலாக மீம்ஸ்கள் மூலம் நேர்மறையான சமுக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களுடைய கற்பனை திறனையும் அதை எடிட் செய்யும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். தமிழிசையை வெச்சு செஞ்சுட்டீங்க. இதை அவர்கள்  இனியும் தொடர வேண்டும் என்றால் தொடரட்டும். அதை என் இதயத்துக்குக் கொண்டு செல்ல மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இனியாவது தமிழிசையை விடுவீங்களா மீம்ஸ் கிரியேட்டர்ஸ்?! 

click me!