தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் காலமானார்.! பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் அஞ்சலி..!

Published : Oct 13, 2020, 09:16 AM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் காலமானார்.! பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் அஞ்சலி..!

சுருக்கம்

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தாயார்  தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 93. இந்நிலையில் நள்ளிரவு காலமானார்.  

தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி தாயார்  தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 93. இந்நிலையில் நள்ளிரவு காலமானார்.

கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12.15  மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்துள்ளார். முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயாரின் உடலுக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன்,
தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பண்ணன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!