தமிழகத்தில் பந்த் தோல்வி! காங்கிரஸ் முதுகில் குத்திய தி.மு.க!

Published : Sep 12, 2018, 10:22 AM ISTUpdated : Sep 19, 2018, 09:23 AM IST
தமிழகத்தில் பந்த் தோல்வி! காங்கிரஸ் முதுகில் குத்திய தி.மு.க!

சுருக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் பந்த் நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் பந்த் நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. விஷம் போல் ஏறி வரும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிராக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களையும் ராகுல் காந்தியே நேரடியாக தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தார். இதனால் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் பா.ஜ.கவிற்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்தும், கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தும் முழு அடைப்பிற்கு ஆதரவு திரட்டினர். இதனால் காஷ்மீர் முதல் கேரளா வரை முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் மட்டும் முழு அடைப்புக்கு துளியளவு கூட ஆதரவு காணப்படவில்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. கடைகள் திறந்திருந்தன. திரையரங்குகள் இயங்கின. இத்தனைக்கும் கடந்த சனிக்கிழமை அன்று சத்தியமூர்த்தி பவனுக்கு அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் நேரில் அழைத்து திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஆனாலும் கூட தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் கிடையாது. ஆனால் தி.மு.கவிற்கு உண்டு. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு போன்ற மிக முக்கியமான பிரச்சனைக்கு நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு என்று ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஸ்டாலின் எங்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏன் கனிமொழி, துரைமுருகன் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் கூட ஆர்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. 

இத்தனைக்கும் கடந்த சில நாட்களாகவே பா.ஜ.கவை ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அப்படி இருந்தும் இந்த முழு அடைப்பு வெற்றி அடையாமல் போனதற்கு தி.மு.க தங்கள் முதுகில் குத்தியது தான் காரணம் என்று காங்கிரஸ் தமிழக தலைவர்கள் கருதுகிறார்கள். ஸ்டாலின் நினைத்திருந்தால் தங்கள் மாவட்டச் செயலாளர்களை அழைத்து முழு அடைப்பை வெற்றி பெறச் செய்யுமாறு கூறியிருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

ஆனால் மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டம் தமிழகத்தில் பிசுபிசுக்க வேண்டும் என்கிற ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தி.மு.க நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் தமிழக தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். அறிக்கை, பேட்டிகள் மூலம் பா.ஜ.கவை எதிர்க்கும் ஸ்டாலின் களம் என்று வந்துவிட்டால் நழுவுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ தமிழகத்தில் முழு அடைப்பு தோல்வி அடைந்துவிட்டதால் பா.ஜ.கவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..