EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்பிரியா சுலே ஆதரவு

Published : Dec 16, 2025, 02:56 PM IST
EVM

சுருக்கம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது அவரது மகனும், அவரது கட்சியும்தான் அவற்றை எதிர்க்கின்றன.

‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நானும் அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் நான் மின்னணு வாக்குப்படிவு இயந்திரங்கள் அல்லது விவிபேட் குறித்து கேள்வி எழுப்ப மாட்டேன்’’ என தேசியவாத காங்கிரஸ் எம்.பி.,சுப்ரியா தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குத் திருட்டு குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா இதுகுறித்து, ‘‘"நான் அதே இயந்திரத்தின் மூலம் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அதனால் நான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அல்லது விவிபேட் இயந்திரங்களைக் கேள்விக்குள்ளாக்க மாட்டேன். நான் அந்த இயந்திரத்திற்கு எதிராகப் பேசவில்லை. நான் ஒரு மிகக் குறுகிய கருத்தை முன்வைக்கிறேன். மகாராஷ்டிராவில் இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து நான் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளேன்" என்று மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியின் நான்கு முறை வெற்றி பெற்றுள்ள மக்களவை உறுப்பினரான சுலே கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியின் கூட்டணிக் கட்சியான சுப்ரியா சுலே, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தின்போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக முன்வைத்து வரும் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது சுமத்தி வருகிறார்.

இந்த விவாதத்தின்போது, ​இந்தியாவின் ஜனநாயகத்தை சேதப்படுத்த தேர்தல் ஆணையத்தை பாஜக "வழிநடத்திப் பயன்படுத்துகிறது" என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார் ராகுல் காந்தி. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவில் இருந்து இந்தியத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டதையும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும், இப்போது அவரது மகனும், அவரது கட்சியும்தான் அவற்றை எதிர்க்கின்றன என்றும் கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது என்பதையும் ஷா சுட்டிக்காட்டினார். "இது 2004-ல் மன்மோகன் சிங் பிரதமரானபோது நடந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-ல் நாங்கள் வெற்றி பெற்றபோது, ​​காங்கிரஸ் கட்சியினர் சந்தேகங்களை எழுப்பினார்கள்" என்று அமித் ஷா கூறினார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!