"அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகளுக்கு யாராலும் கலைக்க முடியாது" - சொல்கிறார் சு.சாமி!

Asianet News Tamil  
Published : Aug 14, 2017, 02:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
"அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகளுக்கு யாராலும் கலைக்க முடியாது" - சொல்கிறார் சு.சாமி!

சுருக்கம்

subramaniyan swamy talks about admk

அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகளுக்கு யாராலும் கலைக்க முடியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில்தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சியை 4 ஆண்டுகள் நீடிக்கும் என்றார். அதிமுக ஆட்சியை யார் நினைத்தாலும் கலைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரிய அவசர சட்டத்துக்கான வரைவு மசோதா, மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!