ஐபேக்கை வைத்து சுற்றினாலும் ஸ்டாலினால் வெற்றிபெற முடியாது.. அடித்து துவம்சம் செய்த அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2021, 11:46 AM IST
Highlights

ஸ்டாலின் என்னதான் ஐபேக்கை வைத்து சுற்றினாலும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகள் குறித்து தர்மபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் கே.பி அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.   

ஸ்டாலின் என்னதான் ஐபேக்கை வைத்து சுற்றினாலும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகள் குறித்து தர்மபுரியில் கட்சி நிர்வாகிகளுடன் கே.பி அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசியதாவது:  வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் ஆனாலும் சரி, கூட்டணி கட்சியினர் ஆனாலும் சரி அவர்களை வெற்றி பெறச் செய்து எடப்பாடியை மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். 

அதேபோல் திமுகவினரின் பொய் பிரச்சாரத்திற்கு நாம் பதிலடி கொடுத்தாக வேண்டும், திமுக கூறிவரும் பல பொய்களை இப்போது ஒரு புது பொய் தர்மபுரி நகரத்திற்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்தி விட்டதாக பிரச்சாரம் செய்கிறார்கள், ஒகேனக்கல் தண்ணீர் முழுமையாக தருமபுரி நகராட்சி முழுவதும் கிடைக்கிறது என்பதை திமுகவினருக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிமுக ஆட்சியில் மட்டும்தான் அதிக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .ஆனால் அதிமுக மீது தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் திமுகவினருக்கு சவுக்கடி கொடுத்து அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 

ஸ்டாலின் என்னதான் ஐபேக்கை வைத்து சுற்றினாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எடப்பாடி முதல்வராக மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் வெறி பிடித்து அலைகின்றனர். கட்டப்பஞ்சாயத்து செய்யும் திமுகவினரை துரத்தி அடிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!