திருக்குவளையில் திமுக தலைவராக ஸ்டாலின்...! முதல்முறையாக....காண கிடைக்காத நிகழ்வுகள்..!

By thenmozhi gFirst Published Sep 3, 2018, 4:57 PM IST
Highlights

கலைஞரின் தந்தை முத்துவேல், தாய் அஞ்சுகம் அம்மாள் மற்றும், முரசொலி ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த வருகையை தொண்டர்கள் வெகுவாக வரவேற்றனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை சென்ற திமுக தாலைவர் ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் நின்று தொண்டர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.திருச்சி சென்ற  ஸ்டாலின் அங்கிருந்து நேரடியாக  நாகை மாவட்டம் திருக்குவளை சென்றார். திருக்குவளையில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாள் வீட்டிற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

கலைஞரின் தந்தை முத்துவேல், தாய் அஞ்சுகம் அம்மாள் மற்றும், முரசொலி ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். ஸ்டாலினின் இந்த வருகையை தொண்டர்கள் வெகுவாக வரவேற்றனர்.

பெண்கள் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியாக  வரவேற்றனர்.பள்ளி மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் ஸ்டாலினை வரவேற்றனர். மேலும் அங்குள்ள ஒரு குழந்தைக்கு ஸ்டாலின் பெயர் வைத்த அற்புத நிகழ்வும் நடந்தது.

இதன் தொகுப்பை படங்களாக பார்க்கலாம். 


 

click me!