
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை அனுபவிக்கும் நிலைமை போன்று வேறு எங்கும் நடக்காது எனவும் மானிய கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவோம் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒ.பி.எஸ் அணியின் எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ விவகாரத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பினார்.
ஆனால் சபாநாயகர் தனபால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை திமுக உறுப்பினர்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனபால் எச்சரித்தார். திமுகவினர் அடங்காததால் திமுகவினரை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு தன்பால் உத்தரவிட்டார்.
இதையடுத்து திமுகவினர் வெளியேற்றபட்டனர். வெளியேறிய திமுகவினர் வீடியோ விவகாரம் குறித்த பாதகைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்தனர்.
இந்நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை அனுபவிக்கும் நிலைமை போன்று வேறு எங்கும் நடக்காது எனவும் மானிய கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்புவோம் எனவும் தெரிவித்தார்.