ஜெயலலிதாவை மருத்துவமனையில் பிரதமர் ஏன் பார்க்கவில்லை? ஸ்டாலின் கூறும் விளக்கம்..!

 
Published : Oct 02, 2017, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஜெயலலிதாவை மருத்துவமனையில் பிரதமர் ஏன் பார்க்கவில்லை? ஸ்டாலின் கூறும் விளக்கம்..!

சுருக்கம்

stalin criticize modi and government

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முன்னதாகவே மத்திய அரசுக்கு தெரியும். அதனால்தான் பிரதமர் மோடி மருத்துவமனையில் வந்து ஜெயலலிதாவை பார்க்கவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான கோபத்தை விட ஆட்சியைக் கவிழ்க்காமல் இருக்கும் திமுக மீதுதான் மக்கள் அதிகமான கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முன்னதாகவே தெரிந்ததால்தான் பிரதமர் மோடி அவரை மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லை. அந்த உண்மைகளை மறைக்கவே இந்த புதிய ஆளுநர் நியமனம் நடந்துள்ளது. இடைதேர்தல்களில் பயன்படுத்தியதாக சொல்லபட்ட ஜெயலலிதா கைரேகைகளும் பொய் தான்.  

அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த போது தமிழக அரசு சார்பில் மருத்துவ குறிப்புகள் வெளியாயின. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மருத்துவ குறிப்புகள் ஏன் வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!