ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு மு.க.ஸ்டாலினை அசிங்கப்படுத்திய எஸ்.பி.வேலுமணி..!

By Thiraviaraj RMFirst Published Mar 20, 2021, 5:23 PM IST
Highlights

சிறுபான்மையினருக்கு தி.மு.க துரோகம் மட்டுமே செய்துள்ளது. சிறுபான்மையினர் பாதுகாப்பை விட்டு தரமாட்டோம். 

அ.தி.மு.க அரசைக் காப்பாற்ற பா.ஜ.க உதவியாக இருந்தது என அக்கட்சியின் தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை, ராம்நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர், ‘கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.கவின் கோட்டை. முதல் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வென்ற தொகுதி. எந்த கட்சி கூட்டணியில் இருந்தாலும், விசுவாதத்துடன் பணியாற்றுவது அ.தி.மு.க தொண்டர்கள். கூட்டணி சூழ்நிலை காரணமாக கோவை தெற்கு தொகுதி பா.ஜ.கவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கோவை வடக்கு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் மனசாட்சியுடன் வேலை செய்துள்ளோம். செய்துள்ள பணிகளை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். ரஜினிகாந்த் கூட விக் வைக்காமல் வெளியே வருகிறார். மு.க.ஸ்டாலின் வீட்டிற்குள் கூட விக்குடன் இருக்கிறார். தேர்தல் அறிக்கையினால் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க ஜெயிக்கும். தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாத தலைவர் மு.க.ஸ்டாலின். ஒரு குடும்பம் நாட்டை ஆளக்கூடாது. சாமானியர் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு அதிக கோபம் என் மீது தான் உள்ளது. மு.க.ஸ்டாலின் என்னை தான் எதிரியாக நினைக்கிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு சிறு தகுதி கூட கிடையாது. மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க முயன்றபோது, தி.மு.க எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க தயாராக இருந்தனர். குறுக்குவழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தோம். உள்ளாட்சி துறையில் எந்த வேலையும் செய்யாதவர் மு.க.ஸ்டாலின் தான்.

சீட் கிடைக்காததால் ராஜவர்மன் என் மீது ஊழல் புகார் சொல்கிறார். எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது. தி.மு.கவின் பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். சிறுபான்மையினருக்கு தி.மு.க துரோகம் மட்டுமே செய்துள்ளது. சிறுபான்மையினர் பாதுகாப்பை விட்டு தரமாட்டோம். சிஏஏவை நிறுத்துமாறு வலியுறுத்த எங்களால் தான் முடியும். வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல. கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக இடையே தான் போட்டி. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார்’ என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், ‘அ.தி.மு.க அரசை காப்பாற்ற பா.ஜ.க உதவியாக இருந்தது. அமைச்சர்களை பற்றி பா.ஜ.க தலைமைக்கு நாங்கள் எடுத்துச் சொன்னோம். எல்லா திட்டத்தையும் எதிர்க்க மட்டுமே மு.க.ஸ்டாலினுக்கு தெரியும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக சென்றதால் தான் பல திட்டங்கள் வந்துள்ளன. மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான் இருக்கப் போகிறார். சூட்டிங் வந்துள்ள ஹீரோவை சூட்டிங் முடிந்ததும் பேக்கப் பண்ணிடலாம்’என்று தெரிவித்தார்.

click me!