கொரோனாவை கட்டுப்படுத்த மும்பை முழுவதையும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மூடியுள்ளார்.
மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என சொல்லும் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன் என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது . கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது , இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மக்களே முன்வந்து தாங்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை வைத்துள்ளார் . இந்நிலையில் சிவசேனா , மக்களை தனிமைப்படுத்த வேண்டும் எனச் சொல்லும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன் விமர்சித்துள்ளது .
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . இதுவரை இந்த வைரசுக்கு 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் . சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதுவரை நான்கு பேர் இந்தியாவில் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர் . இதனால் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது . எனவே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி வருகிற 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் . இந்நிலையில் இதை விமர்சித்துள்ள சிவசேனா அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது .
அதில் , கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கூறுகிறார் . அரசுப் பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் . ஆனால் மற்றொருபுறம் அவர் பாராளுமன்றத்தை தொடர்ந்து நடத்துகிறார் . கொரோனாவை கட்டுப்படுத்த மும்பை முழுவதையும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மூடியுள்ளார். ஆனால் டெல்லியில் நிலைமை அப்படி இல்லை , பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் எம்பிக்கள் அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டியிருக்கிறது . கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்றக் கூட்டத்தை தள்ளி வைத்திருக்க வேண்டும் என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .