"விரைவில் தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளராவார் சசிகலா" - பண்ருட்டி பேட்டி

Asianet News Tamil  
Published : Feb 07, 2017, 03:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"விரைவில் தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளராவார் சசிகலா" - பண்ருட்டி பேட்டி

சுருக்கம்

சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து எழும் சர்ச்சை  பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கமளித்தார்.

பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். எம்ஜிஆர் திமுகவிலிருந்து பொதுக்குழுவில் இருந்து தீர்மானம் போட்டு விலக்கப்பட்டார். அப்போது அவர் வருத்தப்பட்டார்  அதன் விளைவு எல்லா உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்கணும்னு போட்டார்.  

இயக்கத்தை நடத்தி செல்ல பொதுச்செயலாளர்  தேவை எல்லோருடைய ஆதரவை பெற்று பொதுச்செயலாளர் ஒருவரை கொண்டுவர காலதாமதம் ஏற்படும் என்பதால் பொதுக்குழு ஒருவரை பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பரிந்துரை செய்யலாம். 

அப்படி பரிந்துரை செய்யக்கூடாது என்று சட்டத்தில் இடமில்லை. கிடையாது , அந்த அடிப்படையில் தான் சின்னம்மா அவர்கள் பொறுப்பில் இருக்கிறார் என்று போடுகிறோம்.  நாளை தேர்தல் கமிஷனே ஒரு பிரதிநிதியை போடலாம் என்று தான் சொல்லும். ஆகவே பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார். பின்னர் அவர் கட்சிதொண்டர்களால் தேர்வு செய்யப்படும் காலம் வரும். இல்லை வேறு யாரும் வந்தாலும் சரி இதுதான் பிரச்சனை.

PREV
click me!

Recommended Stories

TN Election: 85% வாக்குப்பதிவு.! திமுகவை அதிரவைக்கும் வரலாறு காணாத எழுச்சி! கோட்டை யாருக்கு?
தவெக வாக்கு மாறியது - த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு! தேர்தல் கலாட்டாஸ் ஒரு பார்வை!