கூவத்தூரில் நடந்தது என்ன? - சிறைபிடிக்கப்பட்ட செம்மலை பகீர் தகவல்கள்

First Published Feb 26, 2017, 11:57 AM IST
Highlights
Legislators who had been incarcerated in kuvattur legislators should do what not to do what everyone remarked decided to Sasikala Trust us to sign a blank piece of paper purchased Legislators also inquired with the police arrived So that one type said that they demanded


கூவத்தூரில் எம்எல்ஏக்கள் சிறை வைக்கபட்டிருந்த போது அங்கு என்ன நடந்தது என்று முன்னாள் அமைச்சரும் மேட்டூர் தொகுதி எம்எல்ஏவுமான செம்மலை அதிர்ச்சி தகலவல்களை கூறியுள்ளார்.

தனியார் எப்.எம் ஒன்றி பங்கேற்று பேசிய செம்மலை,

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை சசிகலாவின் ஆட்களே தீர்மானித்தார்கள்.

எங்களை நம்பாமல் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கினார்கள். போலீஸ் வந்து எம்.எல்.ஏ.க்களிடம் விசாரித்தபோது கூட,

அவர்கள் டைப் செய்து கொடுத்திருந்ததை அப்படியே எழுதிக்கொடுக்க வற்புறுத்தினார்கள் என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா குழந்தை போன்றவர்.

அவருக்கு தவறு செய்ய தெரியாது’.

வேறு யாரோ அவரது பெயரை பயன்படுத்தி தவறுகளை செய்துள்ளனர். சுற்றி இருந்தவர்களால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் குற்றம் செய்தவர்கள் வெளியில் கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

click me!