ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் இருந்து ஒபிஎஸ் குரூப் பற்றிய 24 வீடியோக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த 75 நாட்களும் வெளியாட்கள் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை. இதனால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வந்தனர். இதையடுத்து பதவி பிடுங்கப்பட்ட பன்னீர்செல்வமும் ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.மேலும் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.அதன் தொடர்ச்சியாக மருத்துவர் பாலாஜி இன்று 3வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார். இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் இருந்து ஒபிஎஸ் குரூப் பற்றிய 24 வீடியோக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் வழங்கியுள்ளார்.