
கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாக எம்.எல்.ஏ சரவணன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன். இவர் தாங்கள் சிறை வைக்கப்படுவோம் என அறியாமலேயே சசிகலா ஆட்களுடன் வெளியே சென்றுள்ளார்.
தனக்கு பிடிக்காத இடத்தில் 5 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் கடுமையான மணல் உளைச்சளுக்கு ஆளாகி உள்ளார்.
அதன்படி காலை 12 மணி அளவில் பேன்ட் மற்றும் டி-சர்ட் அணிந்து தலையில் கர்சீப் கட்டிக்கொண்டு யாரோ ஒரு சுற்றுலா பயனி போல் கடற்கரை ஓரத்தில் நடந்து சென்று கூவத்தூரை அடுத்த கிராமத்தை சென்றடைந்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த பகீர் வாக்குமூலம் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மட்டுமன்றி தொலைகாட்சியை பார்த்துகொண்டிருந்த பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.