"குறுக்கு விசாரணக்கு தயார்..." அதிரடி பதில் கொடுத்த சரத்குமார்

First Published Apr 7, 2017, 3:24 PM IST
Highlights
sarathkumar says that he is ready for enquiry


தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை  அமைச்சர்   விஜய  பாஸ்கர், சமத்துவ  மக்கள்  கட்சித்தலைவர்  சரத் குமார்  உள்ளிட்டோர்  வீடு மற்றும்  அவர்களுக்கு  சொந்தமான அலுவலங்களில்  சோதனை  நடைபெற்று  வருகிறது .

இது குறித்து கருத்து தெரிவித்த, சரத் குமார், வருமானவரித்துறையினரின் இந்த  சோதனைக்கு பின்  ஏதோ சதி உள்ளது என்றும் , அரசியல்  காழ்புணர்ச்சியால் தான் இந்த  சோதனை  நடத்தப்படுவதாகவும், அதிமுக அம்மா  வேட்பாளர்  டி டி வி  தினகரனுக்கு  ஆதரவு தருவதை  தடுக்கவே இந்த  சோதனை   செய்வதாகவும்,  தங்கள் வேட்பாளருக்கு  ஆதரவு  தெரிவிப்பதை  தடுக்கும்  அதிகாரம்  யாருக்கும் அதிகாரிகளுக்கு  இல்லை  எனவும்  குறிப்பிட்டார் .

மேலும், தேவைப்பட்டால் குறுக்கு விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார் . மேலும்  ஜி.கே வாசன், ஒ பி எஸ்  அவர்களை சந்தித்தாரே.. ஏன்  அவர் வீட்டிலும்  சோதனை  செய்து இருக்கலாமே  எனவும்  கேள்வி  எழுப்பினார்  சரத் குமார். 

click me!