தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத் குமார் உள்ளிட்டோர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது .
இது குறித்து கருத்து தெரிவித்த, சரத் குமார், வருமானவரித்துறையினரின் இந்த சோதனைக்கு பின் ஏதோ சதி உள்ளது என்றும் , அரசியல் காழ்புணர்ச்சியால் தான் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும், அதிமுக அம்மா வேட்பாளர் டி டி வி தினகரனுக்கு ஆதரவு தருவதை தடுக்கவே இந்த சோதனை செய்வதாகவும், தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் அதிகாரிகளுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார் .
மேலும், தேவைப்பட்டால் குறுக்கு விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார் . மேலும் ஜி.கே வாசன், ஒ பி எஸ் அவர்களை சந்தித்தாரே.. ஏன் அவர் வீட்டிலும் சோதனை செய்து இருக்கலாமே எனவும் கேள்வி எழுப்பினார் சரத் குமார்.