ராகுல் காந்தியால் தென் மாவட்டங்களில் எழுச்சி.. முருகன் கூறுவது தவறு.. எகிறி அடிக்கும் விஜய் வசந்த்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Feb 26, 2021, 10:31 AM IST
Highlights

தென்மாவட்டங்களுக்கு ராகுல்காந்தி வருவதால் தென் மாவட்டங்களில் இளைஞர்களிடையேயும் மக்களிடையேயும் எழுச்சி ஏற்படும் என கூறினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தென் மாவட்டத்திற்கான வருகையால் எழுச்சி ஏற்படுமென தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த்குமார் கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மூன்று வீடுகள் தீக்கிரையான நிலையில், அந்த வீடுகளுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். 

அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் அழிவதாக பாஜக மாநில தலைவர் முருகன் கூறுவது தவறு எனவும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் எழுச்சிதான் ஏற்படுவதாக கூறிய அவர், தென்மாவட்டங்களுக்கு ராகுல்காந்தி வருவதால் தென் மாவட்டங்களில் இளைஞர்களிடையேயும் மக்களிடையேயும் எழுச்சி ஏற்படும் என கூறினார். மேலும், தென் மாநிலங்களில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். 

ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்களையும் கண்டு கொள்ளாத நிலையில் தான் உள்ளது என்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே பன்னாட்டு சரக்கு பெட்டக முனையம் அமைவதை தடுத்துப் பொதுமக்களைப் பாதுகாப்பேன் என எச். வசந்தகுமார் கூறிய நிலையில், அவர் வழியில் நின்று பொதுமக்களை நானும் பாதுகாப்பேன் என கூறினார்.
 

click me!