மதுரை துப்புரவு தொழிலாளர்கள் காலில் விழுந்து வணங்கிய வருவாய்துறை அமைச்சர்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2020, 10:14 PM IST
Highlights

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய வருவாய்துறை அமைச்சர் உதயக்குமார், அவர்களது காலில் விழுந்து வணங்கினார்.இச்சம்பவம் அந்த தொழிலாளர்கள் அனைவரையும் நெகிழச் செய்தது.
 

T.Balamurukan

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய வருவாய்துறை அமைச்சர் உதயக்குமார், அவர்களது காலில் விழுந்து வணங்கினார்.இச்சம்பவம் அந்த தொழிலாளர்கள் அனைவரையும் நெகிழச் செய்தது.

மதுரை மாவட்டம். திருமங்கலம் தொகுதி ஒன்றியப் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது இதில், தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு துப்புரவு பணியாளர்கள் காலில் வணங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசு வருகிற 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளது. இதனை தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  திருமங்கலம் தொகுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கப்பலூர், மேலக்கோட்டை, ஆலம்பட்டி, அலப்பலச்சேரி, அம்மாபட்டி, சாத்தங்குடி, உரப்பனூர், செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிருமிநாசினிகள் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வழங்கினார். இதற்கிடையே திருமங்கலம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு, "துப்புரவு பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்" என்று கூறி துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய நிகழ்ச்சி துப்புரவு பணியாளர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

click me!