மேற்கு வங்கத்தில் போட்டியிட தைரியம் இருக்கா..? அமித்ஷாவுக்கு பகிரங்க சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

By Asianet TamilFirst Published Feb 11, 2021, 9:15 PM IST
Highlights

அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால் மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிட தயாரா என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். 
 

மேற்கு வங்காளத்தில் மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மீண்டும் அரியணையில் ஏற மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் தீவிர முயற்சி செய்துவருகிறது. ஆனால், மம்தா பானர்ஜியை எப்படியும் தோற்கடித்தே தீருவது என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்காளத்தைக் குறி வைத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வப்போது தீவிரப் பிரசாரம் செய்துவருகின்றனர்.
அண்மையில் பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, ‘பாரத் மாதா கி ஜே என்றால் மம்தாவுக்குக் கோபம் வருகிறது’ என்று விமர்சித்திருந்தார். தற்போது மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தேர்தலுக்குப் பிறகு மம்தா பானர்ஜியும் பாரத் மாதா கி ஜே  என்று சொல்லுவார்” என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மம்தா பானர்ஜி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “மற்றவர்கள் போல் நான் எழுதிவைத்துக்கொண்டு பேட்டி எதுவும் கொடுப்பதில்லை. அமித்ஷாவுக்கு தைரியம் இருந்தால் மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிட தயாரா? ஒருவேளை அவர் வெற்றி பெற்றால் அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார். 
 

click me!