மக்களை அறிவுகெட்டவங்கன்னு ரஜினி நினைக்கிறாரு... வாங்க மோதி பார்த்திடுவோம்... சீமான் பொளேர்..!

By Asianet TamilFirst Published Dec 6, 2020, 7:36 PM IST
Highlights

ஏதோ 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல ரஜினிகாந்தின் கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். 
 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜெயலலிதா, கருணாநிதி என இருவரும் இருக்கும் போதே நானும் விஜய்காந்தும் கட்சி தொடங்கினோம். தற்போது ரஜினிகாந்த் அழுத்தம் காரணமாகவே கட்சி தொடங்குவதாக அறிவிதிருக்கிறார். இதை நான் உறுதிப்பட நினைக்கிறேன். ரஜினிகாந்தை கூட இருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள். மொத்தமாவே மக்களை அறிவு கெட்ட கூட்டம் என அவர் நினைக்கிறார்.


ரஜினியின் தேவை தமிழகத்தில் எங்கு உள்ளது? ஏதோ 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல அவரது கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது. நீங்க கட்சி ஆரம்பிப்பது என முடிவு செய்துவிட்டீர்கள். நாங்கள் மோதுவது என்று முடிவு செய்து விட்டோம். உங்கள் ரசிகர் மன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒருவரை கூடவா ஒருங்கிணைப்பாளராக உங்களால் தேர்வு செய்ய முடியவில்லை. ஒருவர் பா.ஜ.ககாரர், இன்னொருவர் காங்கிரஸ்காரர். இதுல எப்படி மாற்றம் கொண்டு வருவீர்கள்?” என்று சீமான் தெரிவித்தார். 

click me!