ஏமாற்றத்தை சரி செய்யப்போகும் ரஜினி... நாளை இடியுடன் கூடிய அரசியல் மழைக்கு வாய்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2020, 11:21 AM IST
Highlights

நாளை ரஜினி மக்கள் மன்றத்தில் இடியோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிறது.

நாளை ரஜினி மக்கள் மன்றத்தில் இடியோ அல்லது இடியுடன் கூடிய கனமழையோ பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிறது.
 
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு விஷயத்தில் ஏமாற்றமே என்று தெரிவித்தார்.
 
ரஜினியின் என்ன ? ஏமாந்தார் என்பது குறித்த பல்வேறு கேள்விகளை அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக மாறியது. இதில் ரஜினி தேர்தலில் போட்டியிட்டாலும் முதல்வர் வேட்பாளர் வெறு ஒருவர் என்று கூறினார் என்றும் இதற்கு மன்ற நிர்வாகிகள் சம்மதிக்காததால் இதையே ஏமாற்றம் என்று குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது. இதனிடையே மீண்டும் நாளை காலை 8 மணிக்கு சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேச ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

அவர் முதல்வர் வேட்பாளராக தயங்குவதாகவும், தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டணியை உருவாக்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த சந்திப்பில் முதல்வர், துணை முதல்வர் வேட்பாளர்களை அவர் நாளை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!