தனியார் நிறுவனங்கள் சார்பில் 5000 படுக்கைகள் தயார்..!! கொரோனா சிகிச்சைக்கு எடுக்கப்பட்ட அதிரடி..!!

Published : Mar 31, 2020, 10:53 AM IST
தனியார் நிறுவனங்கள் சார்பில் 5000 படுக்கைகள் தயார்..!! கொரோனா சிகிச்சைக்கு எடுக்கப்பட்ட அதிரடி..!!

சுருக்கம்

தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது .

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வேகவேகமாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது , ஏனெனில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .  அரசு மருத்துவமனையில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் மற்றும் அவர்களுக்கு உதவியாக கார்ப்ரேட் நிறுவனங்களும் மருத்துவ வசதிகள் செய்ய உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சுமார் 15,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன . 

மேலும் கூடுதல் படுக்கை வசதிகள்  தேவையென கணிக்கப்பட்டுள்ள நிலையில்  அப்பல்லோ மருத்துவமனை இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட நோயாளிகள் சிகிச்சை மையத்தை உருவாக்கியுள்ளது . கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்  விதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ,  இந்துஸ்தான் யூனிலீவர் ,  டாச்சீஸ் வாங்கி ,  ஒயோ ,  சோமடோ ,  லெமன் டிரி ,  உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து சிகிச்சை அளிப்பதற்கான தனி அறைகளை உருவாக்கியுள்ளனர் .  தனியார் ஹோட்டல்கள் இணைந்து சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் கொண்ட அறைகளை கொரோனா நோய் சிகிச்சைக்காக அமைத்துள்ளனர் அதேபோல் தற்போது உள்ள நிலைமையில் இருந்து தேவைக்கு ஏற்ப படுக்கை வசதிகளை அதிகப்படுத்தவும் அவர்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது .  இந்த தனி அறைகளை அமைப்பதற்கான செலவுகளை எஸ்பிஐ  ஏற்றுக்கொண்டுள்ளது அதேபோல நோயாளிகளுக்கு தங்கும் செலவு மருத்துவ செலவு போன்றவற்றை ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது .  முதற்கட்டமாக 500 அறைகள் தயாராக உள்ளதாகவும் ,  தேவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளபடும் என்றும் அறிவித்துள்ளது . லெமன் ட்ரீ ஹோட்டல் நிறுவனம் கொடுத்துள்ளார்  அரைக்கு 3 ஆயிரம் ரூபாயும்,  ஜிஞ்ஜர் ஹோட்டல் வழங்கியுள்ள அறைக்கு 2000 ரூபாய் பணமும் வசூல் செய்யபட உள்ளது.  இந்தக் கட்டணத்தில் உணவு அடக்கம் உணவை சோமோட்டோ வழங்கும் என கூறப்பட்டுள்ளது.  

 

 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!