"மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - பொன். ராதா கவலை!!

Asianet News Tamil  
Published : Aug 15, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
"மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்" - பொன். ராதா கவலை!!

சுருக்கம்

pon radha says that dont play with students lives

நீட் தேர்வுக்கு எதிராக பேசி மாணவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கு அரசுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ உரிமை கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்ட வரைவு, மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது விரைவில் நடைபெறும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இன்னும் இரண்டொரு நாட்களில் நீட் தேர்வு விவகாரம் குறித்து முடிவு வெளிவரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நீட் தேர்வுக்கு எதிராக பேசி மாணவர்களின் வாழ்க்கையோடு தமிழக அரசியல்வாதிகள் விளையாட வேண்டாம் என கூறியுள்ளார்.

இன்று 71-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நீட் தேர்வுக்கு எதிராக பேசி, தமிழக மாணவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கு அரசுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ உரிமை கிடையாது என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பலூச் படையினரிடம் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையம்..! வெறித்தனமான தாக்குதல்.. கடும் பீதியில் இராணுவம்..!
UAE-யில் அதிகார நெருக்கடி..! ரூ.23 லட்சம் கோடி சொத்துக்களை மகனிடம் ஒப்படைத்த அதிபர்..!