கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் தப்ப முடியாது - முதலமைச்சர் எடப்பாடி அதிரடி

Asianet News Tamil  
Published : Mar 08, 2018, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
கர்ப்பிணி பெண் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் தப்ப முடியாது - முதலமைச்சர் எடப்பாடி அதிரடி

சுருக்கம்

Police Inspector Kamaraj can not escape because of girl death

காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த இளம்பெண் உஷா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.  

தஞ்சாவூர் மாவட்டம், சூளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உஷா, 3 மாத கர்ப்பிணியான மனைவியுடன், திருச்சியில் நண்பரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்றார்.

அப்போது, திருச்சி துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்த்துள்ளனர். வ்கனம் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றதை அடுத்து, இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்தி சென்று எட்டி உதைத்திருக்கிறார்.

இதில் நிலை தடுமாறிய உஷா மற்றும் அவரது கணவர் ராஜா இரு சக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த உஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் காமராஜ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

மேலும் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!