போராடும் இளைஞர்களுக்கு உதவ வந்த எங்களை கொச்சையாக பேசிய  போலீசார் - அலங்காநல்லூர் பெண்கள் குமுறல்

 
Published : Jan 17, 2017, 03:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
போராடும் இளைஞர்களுக்கு உதவ வந்த எங்களை கொச்சையாக பேசிய  போலீசார் - அலங்காநல்லூர் பெண்கள் குமுறல்

சுருக்கம்

நமது மண்ணுக்காக போராட பலநூறு மைல்கடந்து வந்து இங்கு கிடக்கும் இளைஞர்களுக்கு உதவ வந்த எங்களை அவர்களுடன் இணைத்து கொச்சைபடுத்தி பேசினார்கள் போலீசார் என போராட்டத்தில் தங்களையும் இணைத்துகொண்ட பெண்கள் குமுறலுடன் தெரிவித்த்னர்.

அலங்காநல்லூர் , அவனியாபுரம் ,பீளமேடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்படுவது போலீசாரின் செயல்பாடுகளைத்தான். கலவரக்காரர்களை பந்தாடுவது போல் கடுமையாக மனிதாபிமானமற்று போலீசார் நடந்து கொண்டதை பலரும் கண்டித்துள்ளனர்.

அலங்காநல்லூரில் அனைத்துக்கும் சிகரம் வைத்தார்போல் சகோதரர்களாக எண்ணி போராடும் இளைஞர்களுக்கு உணவளிக்க வந்த , ஆதரவளிக்க வந்த உள்ளூர் கிராம பெண்களை கொச்சையாக பேசியதாக கிராம பெண்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் நடைபெறவில்லை.இதை கண்டித்து சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். அவனியாபுரத்தில் பற்றிய தீ, பாளமேட்டில் பெரிதாகி அலங்காநல்லூரில் அடங்காநல்லூராக பெருந்தியாக பற்றி எரிகிறது.

அலங்கா நல்லூரில் ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் மாணவர்கள் கடும் தடியடி அடக்குமுறைக்கு பின்னரும் வாடிவாசல் வழியாக காளைகளை திறந்துவிட வேண்டும் என்று அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே போராட்டம் நடத்தி வருகின்ற்னர்.

நூற்றுக்கணக்கில் திரண்ட இளைஞர்களை மாணவர்களை பெண்களை ஆரம்பத்தில் மிரட்டி பார்த்த காவல்துறை பின்னர் பயந்து போய் மிரட்சியுடன் பார்க்க ஆரம்பித்தது. 

அவர்களுக்கு உணவு கூட அளிக்க விடாமல் பாதுகாத்து? வருகின்றனர். எங்கிருந்தோ வந்த படித்த மாணவர்கள் இளைஞர்கள் தமது பண்பாடு கலாச்சாரத்துக்காக போராடுவதை கண்டதும் உள்ளூர் மக்கள் உடனடியாக அங்கு திரண்டு அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் சேர்ந்து கொண்டனர். 

அவர்களுக்காக உணவளிக்க உள்ளூர் பெண்கள் உணவு எடுத்து வந்த போது அதை பிடுங்கி கீழே எரிந்ததாகவும். 

தங்களையும் போராடும் இளைஞர்களுடன் இணைத்து கொச்சைப்படுத்தி பேசியது தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்ததாக கூறிய அலங்கா நல்லூர் கிராம புறபெண்கள் , எங்கிருந்தோ படித்த வசதியான இளைஞர்கள் எங்கள் போராட்டத்துக்காக இங்கு வந்து மண் தரையில் படுத்து கிடக்கின்றனர். 

இவர்களுக்கு உதவ வந்த எங்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று தப்பாக பேசுகிறார்கள் . எங்களுக்கு ஒத்துழைப்பு கூட தரவேண்டாம் , ஆனால் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு சொல்லிகொடுக்கணும்.

எங்களை கொச்சையாக பேசிய போலீசாரை கண்டிக்கின்றோம். இது பற்றி தமிழக அரசு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு