கறந்த பால் மடி புகாது... திமுக ஆட்சிக்கு வர முடியாது… அடித்துச் சொல்லும் கவிஞர் முத்துலிங்கம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2021, 11:21 AM IST
Highlights

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்று திரைப்படப் பாடலாசிரியரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான கவிஞர் முத்துலிங்கம் உறுதிபடக் கூறியுள்ளார். 
 

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்று திரைப்படப் பாடலாசிரியரும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான கவிஞர் முத்துலிங்கம் உறுதிபடக் கூறியுள்ளார். 

திருத்தணி சட்டமன்ற அதிமுக வேட்பாளருக்கு வாக்குசேகரித்த அவர், ‘’இந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. திமுக கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்கிறார் ஸ்டாலின். ஆனால் அதிமுக கூட்டணி தான் வெற்றி கூட்டணி. திமுக ஆட்சிக்கு வரவே முடியாது.

’இலங்கை பிரச்சனையில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வோம் என்று சொல்லிவிட்டு ராஜினாமா செய்யாமல் ஈழத்தமிழர் அழிவுக்கும் விடுதலைப்புலிகள் அழிவுக்கும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள்களூக்கும் எப்போது கருணாநிதி காரணமாக இருந்தாரோ அப்போது உலகத் தமிழர்கள் தங்கள் உள்ளத்தில் இருந்த திமுகவையும் கருணாநிதியையும் தூக்கி எறிந்து விட்டார்கள். 

உலகத் தமிழர்கள் தங்கள் புறத்திலிருந்து திமுகவையும் கருணாநிதியையும் தூக்கி எறிந்து விட்டார்கள் ஈழத் தமிழர்களின் சாபமும் உலகத்தமிழர்களின் கோபமும் சேர்ந்து தான் திமுகவை தோல்வி பள்ளத்தாக்கிலே தூக்கி வீசி சுருண்டு விழ செய்துவிட்டது. அதிலிருந்து அவர்கள் மீண்டு வரமுடியாது. கருணாநிதி காலத்திலேயே திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லையே. ஸ்டாலின் காலத்தில் ஆட்சிக்கு வரப் போகிறதா திமுக? ஆயிரம் தான் இருந்தாலும் கருணாநிதிக்கு நிகரான தலைவரா ஸ்டாலின்?

கருணாநிதியைப்போல பேச்சாற்றல், எழுத்தாற்றல் ஸ்டாலினுக்கு உண்டா? இல்லையே. பின்பு எப்படி அவரால் ஆட்சிக்கு வரமுடியும்? உதிர்ந்த பூவும் இலையும் காயும் மீண்டும் போய் மரம் புகா அப்படி இழந்த ஆட்சி இழந்ததுதான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியாது ’’என்று திட்டவட்டமாக கூறினார்
.

click me!