அன்புமணி தான் முதல்வராக வேண்டும்
தமிழகத்தில் பரபரப்புக்கு அளவே இல்லை. எந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது புது செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆவி தன்னிடம் சில கருத்துக்களை கூறியதாக பா மக ராமதாஸ் தெரிவித்துள்ளார் .இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நூல் வெளியீட்டு விழா
சேலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மா நூல் வெளியீட்டு விழாவில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்துக் கொண்டு உரையாற்றினார் . அப்போது, “ நாங்கள் ஊழல் செய்துவிட்டோம் என ஜெயலலிதா ஆவி கூறியதாகவும், அதனால் அன்புமணிதான் முதல்வராக வேண்டும் என ஜெயலலிதா ஆவி விரும்புகிறது என , ராமதாஸ் தெரிவித்தார் . இவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
தொடர்ந்து பேசிய ராமதாஸ், எங்களை ஜாதிக் கட்சி என்ற முத்திரையை குத்தாதீர்கள் என கேட்டுக்கொண்டார் .