ஸ்டாலின் மீது கொலை காண்டில் இருக்கும் மோடி... உண்மையை போட்டு உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..!

By vinoth kumarFirst Published Nov 22, 2020, 4:41 PM IST
Highlights

திமுகவை ஒழித்து கட்டுவதுதான் முக்கிய இலக்காக பாஜக கொண்டுள்ளதாகவும்,  மு.க.ஸ்டாலின் மீது கொலை காண்டில் பிரதமர் மோடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

திமுகவை ஒழித்து கட்டுவதுதான் முக்கிய இலக்காக பாஜக கொண்டுள்ளதாகவும்,  மு.க.ஸ்டாலின் மீது கொலை காண்டில் பிரதமர் மோடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கையில்;- பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் திமுகவின் ஏன் இவ்வாறு இருக்கிறார்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் நான் எந்த தவறு செய்தேன். கருப்புக்கொடிகாட்டி இருக்கிறார்கள், மேலும் Gobackmodi என்பது அவரது மனதை புண்படுத்திவிட்டது. அம்மாநில மக்களின் நலன் கருதி தானே அங்கு ராணுவ தளவாட உற்பத்தி நிலையம் அமைத்தோம் என அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், திமுகவை ஒழித்துக் கட்டுவதன் முக்கிய இலக்காக பாஜக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அழைப்பின் பேரிலேயே அமித்ஷா சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது. மாதம் ஒருமுறை அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர் தமிழகம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இனி திமுகவின் மீது வழக்குகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்படும் எனவும், கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போதும் அவர் மறைவின் போதும் நேரடி வந்து ஆறுதல் தெரிவித்த நல்ல மனிதராக பிரதமர் மோடி நடந்து கொண்டவர்.

ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் ஒருமையில் ஸ்டாலின் பேசியது, தனது கட்சியினர் மேடையில் பேச விட்டு அதே  மேடையில் அமர்ந்து ரசித்தவர் ஸ்டாலின். விரைவில் பாஜக தமிழகத்தில் முழு அளவில் களமிறங்க இருப்பதாகவும், முழுமையாக திமுகவினரை எந்தவித அரசியலும் இல்லாமல் எதிர்க்க பாஜகவினருக்கு பிரதமர் மோடி  உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி கட்டிலில் அமரவிடக்கூடாது என்பதில் மோடி தீவிரமாக இருந்து வருவதாகவே கூறப்படுகிறது.

click me!