உதவியாளரின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத அமைச்சர் விஜயபாஸ்கர்... மனதை உருக்க வைக்கும் சம்பவம்..!

By vinoth kumarFirst Published Jan 13, 2020, 11:04 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். இந்நிலையில், இவர் நேற்று சென்னை புறப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையம் வரை காரில் சென்று வழியனுப்பிவிட்டு, பின்னர் மீண்டும் தனது சொந்த ஊரான பரம்பூர் திரும்பினார். அப்போது பெருமாள்பட்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதியது.

புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளரான வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த தனது உதவியாளரின் உடலைப் பார்த்து அமைச்சர் விஜயபாஸ்கர் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். இந்நிலையில், இவர் நேற்று சென்னை புறப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையம் வரை காரில் சென்று வழியனுப்பிவிட்டு, பின்னர் மீண்டும் தனது சொந்த ஊரான பரம்பூர் திரும்பினார். அப்போது பெருமாள்பட்டி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதியது.

இதில், வெங்கடேஷ் மற்றும் ஓட்டுநர் செல்வமும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், சொந்த ஊரான பரம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் வெங்கடேசனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் வெங்கடேசனின் உடலைப் பார்த்து விஜயபாஸ்கர் கதறி அழுத சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இருவரது மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் முகநூல் பக்கத்தில் சாலை விபத்தில் சிக்கி சாகக்கிடந்த பலரைக் காப்பாற்றி மகிழ்ச்சி கொண்ட என்னால் உன்னைக் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போயிற்றே என் நேசத்திற்குரியவனே.. விபத்து நிகழ்ந்த இடங்களில் ஓடோடிச் சென்று உதவிய உன்னை விபத்தில் பறி கொடுப்பேனென்று எண்ணவில்லையே என்று பதிவிட்டிருந்தார். 

click me!