அரசியல் ஆதாயத்துக்காக மக்களை தூண்டி விடுகிறார் ப.சிதம்பரம் .!! ஹெச்.ராஜா அட்டாக்.!!!

By Thiraviaraj RMFirst Published Apr 16, 2020, 10:55 PM IST
Highlights

  அரசியலுக்காக மக்களை ப. சிதம்பரம் மக்களை தூண்டிவிடுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
 தமிழகத்தில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

T.Balamurukan

அரசியலுக்காக மக்களை ப. சிதம்பரம் மக்களை தூண்டிவிடுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.ஆனால் சமூக விலகலை முன் வைத்து அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது6.042020 வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கொரோனாவால் உயிர் இழப்பவர்களுக்கு 1கோடி நிதி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில்,காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, அரசியலுக்காக மக்களைத் தூண்டும் விதமாக ப. சிதம்பரம், ஸ்டாலின் ஆகியோர் பேசி வருகின்றனர்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பே பாராட்டு தெரிவித்துள்ளது. ஆனால் இங்குள்ளவர்கள் அதனை குறை சொல்கின்றனர்.மத்திய அரசு பற்றி கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ஒரு பதிவு கண்டிக்கத்தக்கது. அது முட்டாள்தனமானது என்று கூறினார்

click me!