கோட்டூர்புரம் பிள்ளையாரை வணங்கி, செண்டிமென்டாக பிள்ளையார் சுழி  போட்ட ஒபிஎஸ்..!!!  

Asianet News Tamil  
Published : Feb 09, 2017, 06:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
கோட்டூர்புரம் பிள்ளையாரை வணங்கி, செண்டிமென்டாக பிள்ளையார் சுழி  போட்ட ஒபிஎஸ்..!!!  

சுருக்கம்

கோட்டூர்புரம் விநாயகர்

கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேருடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

பின்னர்  வெளியே வந்த ஒபிஎஸ், கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு இஷ்ட தெய்வம் “கோட்டூர்புரம் விநாயகர்” கோவில்.   இந்த கோவிலுக்கு   மறைந்த முதல்வர்  ஜெயலலிதா  அவ்வபோது  விருப்பப்பட்டு  வருவார் என்பது  குறிபிடத்தக்கது.

அம்மா வழியே ஒபிஎஸ் :

இந்நிலையில், ஆளுநரை சந்தித்து வெளியே வந்தவுடன் முதல்வர் ஒபிஎஸ்,  ஜெ அம்மாவிற்கு  பிடித்த  இஷ்ட கோவிலான கோட்டூர்புரம் விநாயகர்  கோவிலுக்கு சென்று,  விநாயகரை  வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்  மூலம்  ஜெ அம்மாவை  போன்றே , ஒ பி எஸ்  அவர்களும் , செண்டிமென்டாக பிள்ளையார் சுழி  போட்டு  தன்னுடைய  வேலையை  தொடங்கியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!