தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகீயோர் திடீரென சந்தித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகீயோர் திடீரென சந்தித்து வருகின்றனர்.
தேமுதிக உயர்நிலைக்கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் விஜயகாந்தை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இருப்பினும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் நாளை தேமுதிக கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தங்களது நிலையை அறிவிக்க இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அமைச்சர் ஜெயகுமாரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதியாகி இருக்கிறது.