பன்னீருக்கு சொந்தமாக தீவு உள்ளது - விஜயபாஸ்கர் ; கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் - அதிகாரிகள்!

 
Published : Apr 11, 2017, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பன்னீருக்கு சொந்தமாக தீவு உள்ளது - விஜயபாஸ்கர் ; கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் - அதிகாரிகள்!

சுருக்கம்

ops has own island says vijayabaskar

வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று நேரில் ஆஜரான விஜயபாஸ்கரிடம், அதிகாரிகள் பல கேள்விகளை துருவி, துருவி கேட்டுள்ளனர்.

ஆரம்பத்தில், சுற்றிவளைத்து திசை திருப்புவது போல பேசியுள்ளார் விஜயபாஸ்கர். 

பின்னர், உங்களை ஒரே நாளில் வளைக்க வில்லை, 120 நாட்கள் கண்காணித்து, ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகே வளைத்துள்ளோம் என்று, அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர்.

அப்போது, பன்னீர்செல்வத்திற்கு வெளிநாட்டில் சொந்தமாக ஒரு தீவு உள்ளது, அதற்கான விவரங்கள் என்னிடம் உள்ளது என்று விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

கோபமடைந்த அதிகாரிகள், அது இருக்கட்டும், கேட்கிற கேள்விக்கு மட்டும் உரிய பதிலை சொல்லுங்கள், என்று ஆதாரங்களை எல்லாம் எடுத்துப்போட்டு கிடுக்கி பிடி போட்டுள்ளனர்.

இனியும், தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அவர், வேறு வழியின்றி பல உண்மைகளை ஒத்துக்க கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..
அதிமுகவில் இருந்து 4 முக்கிய நிர்வாகிகள் அடியோடு நீக்கம்..! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!