ஓபிஎஸ் தம்பி ராஜா தொடர்புடைய வழக்கில் அரசு வழக்கறிஞரின் முயற்சி தோல்வி

 
Published : Mar 04, 2017, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
ஓபிஎஸ் தம்பி ராஜா தொடர்புடைய வழக்கில் அரசு வழக்கறிஞரின் முயற்சி தோல்வி

சுருக்கம்

Temple priest admitted that the main culprit in the murder

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜா. இவர் பெரியகுளம் நகரமன்ற தலைவராக இருந்தவர்.

கோவில் பூசாரி ஒருவரின் கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மேலும் 4 பேரை வழக்கில் சேர்க்கவேண்டும் என கூறி தமிழக அரசின் வழக்கறிஞர் பி.மோகன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஓபிஎஸ் தம்பி ராஜா தொடர்புடைய கோவில் பூசாரி கொலை வழக்கில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை சேர்க்கவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.ரமணா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்னையில் வக்கீல் மோகன் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்தது தவறு.இவருக்கு மனு தாக்கல் செய்ய எந்த அடிப்படையும் இல்லை அரசு தான் மனு தாக்கல் செய்யவேண்டும் என மனுவை தள்ளுபடி செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்