
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை அதிமுக ஒரு எஃகு கோட்டையாக இருந்து வந்தது. அவர் மறைவுக்கு பிறகு அதிமுகவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை சேர்ந்த 60 லட்சம் உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.