அன்பழகன் பெயரை எதிர்ப்பதா.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு திராவிட சிந்தனைகள் அறவே இல்லையா.? கொதிக்கும் தங்கம் தென்னரசு!

Published : Dec 19, 2021, 10:35 PM IST
அன்பழகன் பெயரை எதிர்ப்பதா.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு திராவிட சிந்தனைகள் அறவே இல்லையா.? கொதிக்கும் தங்கம் தென்னரசு!

சுருக்கம்

ராணிமேரி கல்லூரி வளாக கட்டிடத்தின் கலைஞர் மாளிகை என்ற பெயர் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது.  அண்ணா நூலகத்தையும் புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது அதிமுக அரசுதான். அதைப்போல அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை.

சென்னையில் ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலகத்துக்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்திருக்கிறார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலகத்துக்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “‘அம்மா வளாகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நாகரிகமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வது போல் ஆகும்.” என்று சாடியிருந்தனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகக் கட்டடத்திற்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' என பெயர் சூட்டியதை எதிர்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  ஓபிஎஸ், ஈபிஎஸ் மனதில் திராவிட இயக்க சிந்தனைகள் அறவே நீர்த்துப்போய் விட்டன என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிவிட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெயர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. திராவிட இயக்கத்திற்காவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் க.அன்பழகன். 

ராணிமேரி கல்லூரி வளாக கட்டிடத்தின் கலைஞர் மாளிகை என்ற பெயர் அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது.  அண்ணா நூலகத்தையும் புதிய சட்டமன்றத்தையும் சிதைத்தது அதிமுக அரசுதான். அதைப்போல அம்மா வளாகம் என்ற பெயர் மாற்றப்படவில்லை. அம்மா வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்குத்தான் பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அம்மா வளாகம் பெயர் மாற்றப்படவில்லை. வளாகத்துக்கு ஒரு பெயரும், வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு தனித்தனிபெயரும் வைப்பது வாடிக்கைதான். பொதுவாக நிறையக் கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு ஒரு பெயரும், அந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்களுக்குத் தனித்தனிப் பெயர்களும் வைக்கப்பட்டுள்ளமைக்குப் பல எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும்.

பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்கட்சித் தலைவரும், துணை தலைவரும், இது போன்ற அறிக்கைகள் வெளியிடும் போது குறைந்த பட்சம் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு