சிங்குளா ஜெயிச்ச சிங்கத்துக்கு எந்த துறை தெரியுமா ? ஓபிஎஸ்சின் அதிரடி பிளான் !!

Published : May 25, 2019, 01:42 PM IST
சிங்குளா ஜெயிச்ச சிங்கத்துக்கு எந்த துறை தெரியுமா ? ஓபிஎஸ்சின் அதிரடி பிளான் !!

சுருக்கம்

தேனி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகனுமான ரவீந்திரநாத் குமாருக்கு கூட்டணி தர்மப்படி மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ஓபிஎஸ் அவருக்கு கப்பல் போக்குவரத்துறையை கேட்டு கன்பாஃர்ம் பண்ணியுள்ளதாகவும் தெரிகிறது.

தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அதிரடியாக வெற்றி பெற்றபோதும், ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திநாத் குமார், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிந்தவுடன் காசிக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து. தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை உறுதி செய்ததாகவம் கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்தியில் பாஜக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளதால் கூட்டணி தர்மப்படி அதிமுகவுக்கு மத்திய அமைச்சர் பதவியை ஒதுக்கும் என ஓபிஎஸ் எதிர்பார்க்கிறார். 

அதிமுக பல இடங்களில் ஜெயித்திருந்தால் ஒருவேளை மத்திய அமைச்சர் பதவிக்கு போட்டி இருந்திருக்கும். ஆனால் தற்போது ரவீந்திரநாத் குமார் சிங்கிளாக ஜெயித்திருப்பதால் மத்திய அமைச்சர் பதவி உறுதி என்கின்றனர்.

இந்நிலையில் ரவீந்திரநாத் குமாருக்கு கப்பல் போக்குவரத்துத் துறை  ஒதுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அமைச்சரவையில் ஓபி.ரவீந்திநாத் குமாருக்கு இடம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?