மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Nov 3, 2021, 10:37 AM IST
Highlights

அதே நேரத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, அறக்கட்டளைத் தலைவர் ரங்கா பதவியில் இருந்து விலகினார்.

ராஜஸ்தானை சேர்ந்த தோல்பூர் மாவட்ட ஆட்சியருக்கு நிலத் தகராறு தொடர்பான அவமதிப்பு வழக்கில், பிகானேர் நீதிமன்றம் ஒரு மாத கால சிவில் சிறைத்தண்டனை விதித்தது.

தற்போது ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் கலெக்டராக உள்ள ஜெய்ஸ்வால் இதற்கு முன் நகர்ப்புற மேம்பாட்டு அறக்கட்டளைக்கு செயலாளராகவும், மஹாவீர் கங்காதலைவராகவும் செயல்பட்டு வந்தனர். 2017 செப்டம்பரில் யுஐடியின் இரண்டு அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மகராம் என்கிற மேகராஜின் வழக்கறிஞர் அனில் ஆச்சார்யா இந்த வழக்கைத் தொடர்ந்தார். 

ஏற்கனவே உள்ள நிலையைத் தொடர நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால், சர்ச்சைக்குரிய நிலத்தைப் பெறுபவராக கங்கா ஷாஹர் என்பவரை போலீஸார் நியமித்ததாக அனில் ஆச்சார்யா கூறினார். இந்த உத்தரவுக்கு இணங்குவதற்கு பதிலாக, ஜெய்ஸ்வால் மற்றும் ரங்கா ஏல நடவடிக்கையை தொடங்கினர். இது தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அக்டோபர் 17 அன்று ஜெய்ஸ்வால் மற்றும் பாஜக தலைவர் ரங்கா ஆகியோருக்கு எதிராக மேகராஜ் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.

செவ்வாய்க்கிழமை கூடுதல் சிவில் நீதிபதி, எண். 2, பிகானேர், ஹக்மிசந்த் ஜெய்ஸ்வால் மற்றும் ரங்கா ஆகியோருக்கு ஒரு மாத சிவில் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் கேடராக பதவி உயர்வு பெற்று சிவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்ஸ்வால் பிகானரில் UIT செயலாளராக இருந்தபோது ஐஏஎஸ் கேடராக பதவி உயர்வு பெற்று தற்போது தோல்பூர் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, அறக்கட்டளைத் தலைவர் ரங்கா பதவியில் இருந்து விலகினார்.

இதுகுறித்து, தோல்பூர் கலெக்டர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘’பிகானர் நீதிமன்ற உத்தரவு பற்றிய தகவல் எனக்கு கிடைத்தது. அது ஜாமீன் பெறக்கூடிய குற்றமாகும். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்” என்றார்.

click me!