தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார்.
தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எல்லாம் பற்றி கவலைப்படாமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாரணாசி சென்றுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். இதனை மனதில் கொண்டு இந்த நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
ஆனால் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்திற்கு இடைத்தேர்தலைப் பற்றி எல்லாம் பெரிய அளவில் கவலை இல்லை என்கிறார்கள். எனவேதான் அவர் இடைத்தேர்தல் பணிகளையெல்லாம் பற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசிக்குச் சென்று தேர்தல் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.