இப்போது தலைவலி... இனிமேல்தான் வயிற்று வலி.. எதிர்கட்சியை தாறுமாறாக விமர்சித்த செங்கோட்டையன்..!

By vinoth kumarFirst Published Dec 23, 2020, 7:06 PM IST
Highlights

பொங்கல் பரிசாக ரூ.2,500 அரசு அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

பொங்கல் பரிசாக ரூ.2,500 அரசு அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் அறிவித்ததோடு, அந்த திட்டத்தைத் தொடங்கியும் வைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் இப்படி பொங்கல் பரிசு கொடுப்பது அரசியலில் ஆதாயம் தேடுவதற்குதான் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இனி வருங்காலங்களில்  அறிவிக்கப்படும் புதியத் திட்டங்கள் பலருக்கு வயிற்று வலியை உண்டாக்கும் என்று எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.

click me!