எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.!சோகத்தில் தமிழ் திரையுலகம்.,!

By T BalamurukanFirst Published Aug 21, 2020, 8:41 AM IST
Highlights

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் மீண்டும் கவலைகிடம் அவரது உடல் உறுப்புக்கள் சீராக இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்திருப்பது மனதிற்கு சந்தோசமாகவே உள்ளது.
 

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் மீண்டும் கவலைகிடம் அவரது உடல் உறுப்புக்கள் சீராக இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்திருப்பது மனதிற்கு சந்தோசமாகவே உள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.வயது 75. கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 'எக்மோ' உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்.. "கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. 'எக்மோ' போன்ற உயிர்காக்கும் உபகரணங்கள் அவருக்கு தேவைப்படுகிறது. செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் வெளியிட்டுள்ள வீடயோ பதிவில்.. "அப்பாவின் உடல்நிலை  எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும்,நேற்றும் தொடருகிறது. இருப்பினும் இசை திரைத்துறையினர் ரசிகர்கள் என அனைவரது பிரார்த்தனை நிச்சயம் அவரை மீட்டு கொண்டு வரும். அந்த கடவுளுக்கும் மனசாட்சி உள்ளது.இன்றைய நேற்று கூட்டு பிரார்த்தனை வீண்போகாது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை; தலைவணங்குகிறேன். ஒவ்வொருவருக்கும் எங்களின் குடும்பத்தினர் சார்பில் நன்றி சொல்கிறேன். கடவுள் என் தந்தையை மீட்டுத்தருவார்.
 

click me!