கொஞ்சம் கூட அசாராத முதல்வர்... நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் விரைகிறார் எடப்பாடியார்...!

Published : Nov 26, 2020, 10:31 AM ISTUpdated : Nov 26, 2020, 10:35 AM IST
கொஞ்சம் கூட அசாராத முதல்வர்... நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் விரைகிறார் எடப்பாடியார்...!

சுருக்கம்

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிவர் புயலின் கோரத்தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.  வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை  வழங்குவதிலும்  மீட்புக் குழுவினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கனிமக்கொள்ளையை தட்டிக்கேட்ட செய்தியாளர்கள் மீது தாக்குதல்.. திமுக MLA கைதாகணும்.. எதிர்க்கட்சிகள் ஆவேசம்!
ராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!