"ஒரு எம்எல்ஏ கூட இல்லாமலேயே பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது" - நாராயணசாமி காட்டம்!!

Asianet News Tamil  
Published : Aug 12, 2017, 12:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
"ஒரு எம்எல்ஏ கூட இல்லாமலேயே பாஜக ஆட்சியை பிடிக்க நினைக்கிறது" - நாராயணசாமி காட்டம்!!

சுருக்கம்

narayanasamy slams bjp

புதுச்சேரியில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமலேயே, ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்படுகிறது. இங்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்சியில் விரிசல் ஏற்படுத்தி, உள்ளே நுழைந்ததுபோல் புதுச்சேரியிலும் நுழைவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒருபோதும் நடக்காது. ஒரு எம்எல்ஏவும் இல்லாமலேயே, ஆட்சியை பிடிக்க பாஜக நினைப்பது பகல் கனவு காண்பது போன்றது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன். அப்போது, மக்களின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்து கொடுப்பதே எனது முதல் பணி.

PREV
click me!

Recommended Stories

சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!