முதல்வராக பதிவியேற்ற எடியூரப்பாவுக்கு ஏன் மோடியோ, அமித்ஷாவோ வாழ்த்து சொல்லல..?

First Published May 20, 2018, 8:22 PM IST
Highlights
modi and amitsha didnt say congrats to yediyoorappa you know why?


கர்நாடகத்தில் 222 இடங்களுக்கு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களையும் பெற்றன.

எனினும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. இந்த கூட்டணியின் சார்பில் எச்.டி. குமாரசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் தனக்கு ஆதரவு அளிக்கும் 117 எம்எல்ஏ-க்களின் கடிதத்தை அளித்து, ஆளுநர் ஆளுநர் வஜூபாய் ரூடாபாய் வாலாவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.ஆனால், ஆர்எஸ்எஸ்-காரரான வஜூபாய் வாலா, 105 எம்எல்ஏ-க்களின்ஆதரவு மட்டுமே இருக்கும் எடியூரப்பா வை அவசர அவசரமாக அழைத்து முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அத்துடன் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு மிகவும்தாராளமாக 15 நாட்கள் அவகாசம் வழங்கினார். எடியூரப்பா பெரும்பான்மை யை நிரூபிப்பதற்கு ஏதுவாக, ஆங்கிலோ இந்தியன் ஒருவரை நியமன எம்எல்ஏ-வும் நியமித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் - மதச்சார் பற்ற ஜனதாதளம் கட்சிகள், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக, புதன்கிழமையன்று நள்ளிரவே உச்சநீதிமன்றம் சென்றன.

இதன் பிறகு வெளியான தீர்ப்பை தொடர்ந்து நேற்று  மாலைக்குள் பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எடியூரப்பா ராஜினாமா செய்துள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பொறுப்பேற்கவுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க எடியூரப்பா ராஜினாமாவே திட்டப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வெறும் 55 மணி நேரத்தில் மாபெரும் சாதனை செய்து முடித்த எடியூரப்பா..!

அதில், கர்நாடகவில் காங்கிரஸோ.. ஜனதாதளமோ.ஆட்சியில் இல்லாத இந்த மூன்று நாட்களில் காவிரி பிரச்சனைக்கு சுமுகமான முடிவு வந்துள்ளது. .

125 ஆண்டு பிரச்சனைக்கு வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எட்டியுள்ளது. 3 நாள் மட்டுமே முதலமைச்சராக இருந்து கர்நாடக விவசாயிகளுக்காக ரூபாய் 56000 கோடி விவசாய கடன்தொகையை தள்ளுபடி செய்துள்ளார்.

அடுத்து வரவுள்ள அரசு. இதை ரத்தும் பண்ண முடியாது. கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பாங்க.

சரின்னு எரியூரப்பா கையெழுத்திட்ட ஆணையை செயல்படுத்தாவிட்டால் ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்ப்பை பெற இயலும்.செயல்படுத்தினால் கஜானா காலியாகி கடும் நிதி நெருக்கடி ஏற்படும்.

மத்திய அரசும் உதவாது. எப்படி பார்த்தாலும் எடியூரப்பாவை வெச்சி மோடி செம வேலை பாத்துருக்காப்ல என  கூறப்படுகிறது.

தற்போது எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டார். காவேரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து குமாரசாமியோ சித்தராமையாவோ உச்சநீதிமன்றத்திற்கு போமுடியாது.

அடுத்தது தமிழகத்திற்கு தேவையான காவிரிநீரை தரமுடியாதென போராட்டமும் நடத்தமுடியாது.

இதனாலதான். கர்நாடகாவுல முதல்வரா பதவியேற்ற எடியூரப்பாவுக்கு மோடியோ, அமித்ஷாவோ வாழ்த்து சொல்லலை...? என  கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய  தயாரான விஷயம் மோடிக்கோ அமித்ஷா விற்கோ தெரியாதா என்ன ?

எப்படியாவது  காவிரி தொடர்பாக தமிழகர்களின் பிரச்சனையை சற்று  கூல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையம்  அமைசாச்சி...

விவசாயிகின் கடனையும் தள்ளுபடி யும் செய்து ஆச்சி....

பதவியும் தூக்கி போட்டாச்சி

விவசாயிகள்  மனதிலும் இடம் பிடித்து  அச்சி....

பாஜக தான் ஆட்சி அமைக்கும் என  நினைத்திருந்தால், எடியூரப்பா பதவியேற்ற  உடனே மோடியும் அமிஷாவும் வாழ்த்து தெரிவித்து இருப்பாங்க...ஆனால் எடியூரப்பாவிற்கு வாழ்த்து  தெரிவிக்காததிலிருந்தே  நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது எல்லாம் அவர்கள் அறிந்ததே...என்பதை தான்.

click me!