வட நாட்டவருக்காக வக்காலத்து வாங்காதீர்.. உடனே வெளியேற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வேல்முருகன்..

Published : Apr 09, 2022, 05:09 PM IST
வட நாட்டவருக்காக வக்காலத்து வாங்காதீர்.. உடனே வெளியேற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வேல்முருகன்..

சுருக்கம்

தமிழகத்திற்குள் வரும் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் தமிழர்‌ தாயகத்தைப்‌ பாதுகாக்கும்‌ முக்கிய நடவடிக்கை என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.  

தமிழகத்திற்குள் வரும் வட மாநிலத்தவர்களுக்கு உள்நுழைவு அனுமதிச் சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் தமிழர்‌ தாயகத்தைப்‌ பாதுகாக்கும்‌ முக்கிய நடவடிக்கை என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஈரோடு மாவட்டம்‌, மொடக்குறிச்சியில்‌ வடமாநில இளைஞர்களால்‌, காவல்துறையினர்‌ கடூமையாகத்‌ தாக்கப்பட்டு, மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வரும்‌ நிகழ்வு அரங்கேறியுள்ளது. குற்ற நிகழ்வுகள்‌ நடக்கும்‌ போது மட்டும்‌, வெளிமாநிலத்தவர்களின்‌ நடவடிக்கைகளை கண்காணிப்பதாகச்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ தமிழ்நாடு காவல்‌ துறையினர்‌, இவர்களை முறையாகக்‌ கண்காணிப்பதற்கான நிரந்தரப்‌ பொறியமைவு எதனையும்‌ இதுவரை ஏற்படுத்தவில்லை. 

இதன்‌ காரணமாக, மண்ணின்‌ மக்களின்‌ மீது தாக்குதல்‌ நடத்தி வந்த வடமாநிலத்தவர்கள்‌, தற்போது காவல்துறையினர்‌ மீதே தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்‌. தமிழினத்தின்‌ அரசுரிமையை மறுக்கின்ற மத்திய அரசு, வெளியார்‌ ஆக்கிரமிப்பை ஊக்குவித்து வளர்த்து, தமிழர்‌ தாயகத்தை சிதைக்க முனைகின்றது. தமிழின அழித்தொழிப்பிற்கு அச்சாரமாக தமிழ்நாட்டு மண்ணில்‌ ஆதிக்கம்‌ செய்யும்‌, வடமாநில தொழிலாளர்கள்‌ மூலமாக, மதவெறி கலவரங்களை உருவாக்கி, அதை அரசியலாக்கி அதன்‌ வாயிலாக, தமிழ்நாட்டில்‌ ஆட்சி அதிகாரத்தை பிடித்து மொத்த மண்ணின்‌ மக்களை சிறுபான்மையாக்கலாம்‌ என பாஜக திட்டமிட்டுள்ளது.

பாஜக அரசு கொடூத்த தைரியத்தின்‌ காரணமாக தான்‌, கோவை, திருப்பூரில்‌ இந்தியில்‌ பிரச்சாரம்‌, திருப்பூரில்‌ கலவரம்‌ ஆகிய குற்ற நிகழ்வுகள்‌ அரங்கேறியது. அதன்‌ மற்றொரு சிக்கல்‌ தான்‌, காவல்துறையினர்‌ மீது நடத்திய தாக்குதலும்‌. எனவே தமிழ்நாட்டிற்குள்‌ பணிக்கு வரும்‌ வட மாநிலத்தவரின்‌ எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும்‌, கண்காணிக்கவும்‌ உள்நுழைவு அனுமதிச்‌ சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ இதற்காக, நடப்பு சட்டமன்றக்‌ கூட்டத்தொடரிலேயே தனிச்‌ சட்டம்‌ இயற்ற வண்டும்‌ என்றும்‌ தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக்‌ கட்சி கோரிக்கை விடுக்கிறது.

சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர்‌, திருச்சி ஆகிய நகரங்களில்‌ குவித்து காணப்படுகின்ற வடமாநிலத்தவர்களை கண்காணிக்க, காவல்துறையில்‌ தனி பிரிவை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்‌. கடந்த 2000ஆம்‌ ஆண்டு குற்றப்‌ பின்னனி கொண்ட 1,16,782 வெளி நாட்டவரை அமெரிக்கா, அவரவர்‌ நாடுகளுக்குத்‌ திருப்பி அனுப்பியது. அதுபோன்று, குற்ற நிகழ்வுகளில்‌ ஈடுபடுகின்ற வடமாநிலத்தவர்களை, தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றவும்‌ தமிழ்நாடு அரசு முன்‌ வர வேண்டும்‌.

தமிழ்நாட்டிற்கு வரும்‌ வட மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர்‌ அட்டை, இருப்பிட சான்று ஆகியவை வழங்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வண்டும்‌. மேலும்‌, வெளியாரை வெளியேற்றுவதென்பது வெறும்‌, தமிழர்களின்‌  வாழ்வுரிமை சார்ந்த சிக்கல்‌ மட்டுமல்ல, அது தமிழர்‌ தாயகத்தைப்‌ பாதுகாக்கும்‌ முக்கிய நடவடிக்கை என்பதையும்‌ தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வண்டும்‌ என்று தமிழக வாழ்வுரிமைக்‌ கட்சி சுட்டிக்காட்டுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..