
ஓ.பி.எஸ்க்கு மணிக்கு மணி ஆதரவு கூடி வருகிறது. இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்யிடம் வந்துவிட்டால் அதிமுக ஆட்சி கலைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., மனோரஞ்ஜிதம் நாகராஜன், சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம் ஆகியோரை தொடர்ந்து வாசுதேவநல்லூர் மனோகரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதில் மூன்று எம்.எல்.ஏக்கள் தலித் எம்,எல்.ஏக்கள் என்பது குறிபிடத்தக்கது.
இந்த நான்கு பேரை தவிர்த்து சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் வெளியே வரும் பட்சத்தில் கொத்து கொத்தாக கூட ஓ.பி.எஸ் வுடன் இணைய வாய்ப்பிருப்பதாக ஓ.பி.எஸ் உடன் இருக்கும் முக்கிய நிர்வாகி தெரிவித்தார்.