ஜெயலலிதா ஸ்டைலில் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய எடப்பாடி : அதிர்ச்சியில் அமைச்சர்கள்!!!

 
Published : Feb 21, 2017, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ஜெயலலிதா ஸ்டைலில் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய எடப்பாடி : அதிர்ச்சியில் அமைச்சர்கள்!!!

சுருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா போன்று அதே ஸ்டைலில் தனது அறையில் அமைச்சர்கள் கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். இதில் கலந்து கொண்ட  அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழக முதலமைச்சராக கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதில் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக இருந்தனர். தங்கள் அமைச்சர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்.

அமைச்சரவைக் கூட்டங்களை அவர்களுக்குரிய மரியாதையுடன் நடத்தினர். அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்கள் பொம்மைகளாக நடத்தப்பட்டனர்.

ஜெயலலிதா காலில் விழுவதும் ஜெயலலிதா வரும்போதும் செல்லும்போதும் சட்டசபையில் வரிசையாக நின்று உடல் தரையில் படும் அளவிற்கு வணங்குவதும் அப்போது விமர்சிக்கப்பட்டது.

தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் முதல்வர் ஆலோசனை நடத்துவதற்கு தனி ‘conference hall’ இருக்கும். ஆனால் ஜெயலலிதா தனது அறையில் மட்டுமே அமைச்சர்களை கூப்பிட்டு ஆலோசனை நடத்துவார்.

அப்போது அமைச்சர்கள் பக்கவாட்டில் அமரவேண்டிய நிலை ஏற்படும்.  முதல்வர் ஜெயலலிதா செல்வாக்கு மிக்கவர் என்பதால் அப்போது அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அதன்பின்னர், முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் தனது துறை அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்களை முறையாக ‘conference hall’ ல் நடத்தினார்.

சாதாரண துறை அலுவலர்கள் கூட்டத்தை கூட ‘conference hall’-ல் நடத்தினார். தற்போது முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று ஜெயலலிதா அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து பதவியேற்றார்.

இன்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். அப்போது, மீண்டும் பழைய பாணியில், ஜெயலலிதா போன்று தனது அறையில் அமைச்சர்களை அழைத்து அமரவைத்து கூட்டத்தை நடத்தினார்.

ஜெயலலிதா இருந்தபோது தான் பக்கவாட்டில் உட்கார்ந்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டோம். ஓ.பி.எஸ் முதல்வரான பின்னர், கவுரமாக ‘conference hall’- ல் கூட்டம் நடந்தது.

ஆனால் தற்போது, மீண்டும் பழைய பாணியில் பக்கவாட்டில் அமர வைக்கின்றார்களே என்று அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

 

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?