ஒ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது – முக்கிய முடிவுகளுக்கு திட்டம்

Asianet News Tamil  
Published : Jan 04, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
ஒ.பி.எஸ். தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது – முக்கிய முடிவுகளுக்கு திட்டம்

சுருக்கம்

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில், அமைச்சரவை கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. இதில், அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

குறிப்பாக 2017 – 18 ஆண்டுக்கான நிதி அறிக்கை, ஜல்லிக்கட்டு விவகாரம், விவசாயிகள் உயிரிழப்பு, விவசாய நிலங்கள் பாதிப்பு, உதய் திட்டம், ஜிஎஸ்டி மசோதா, வறட்சி உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. ஒ.பன்னீர்செல்வம் 3வது முறை முதலமைச்சராக பதவியேற்று நடைபெறும் 3 அமைச்சரவை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!