சசி குடும்பம் சொல்வது உண்மைதான்... அமைச்சர் அந்தர் பல்டி... கடுப்பில் அதிமுக...

First Published Jan 20, 2018, 12:53 PM IST
Highlights
minister rajendrabalaji said sasikala brother divakaran says is right


டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என கூறுவது ஒருவேளை சசிகலா குடும்பம்  பக்கம் சாய்கிறாரோ என அதிமுக வட்டாரத்தில் உண்டாக்கியுள்ளார்.

நேற்று விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியபோது, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி அம்மா இறந்து விட்டார் என்ற தகவல் தெரிந்தது. அந்து மாலை அப்பல்லோவிலிருந்து எனக்கு நெருங்கிய நம்பர் ஒருவர் போன் செய்தார். அப்போது அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ரொம்பவும் சீரியஸாக உள்ளார் என்றார். நானும் பதறி அடித்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்தேன். ஆனால் யாருமே எடுக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவின் தனிச்  செயலாளர் பூங்குன்றனுக்கு போன் போட்டேன் அவரும் எடுக்கல. எனக்கு தெரிந்தவருக்கு போன் போட்டு அவரிடம் கொடுக்கச் சொன்னேன். அப்போது  அவர் கதறி அழுதார்.

அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சொன்னார். அப்போதே சென்னைக்கு கிளம்பி வந்து கொண்டிருந்தேன்.

மீண்டும்  அதிகாலை 2 மணிக்கு தலைமை கழகத்திடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வரவேண்டும் என்றார்கள். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றவுடன் ஜெயலலிதா இறந்துவிட்டதாக காலை 11 மணிக்கு எனக்கு தகவல் சொன்னார்கள். அதற்கு முன்பே அவர் மருத்துவ ரீதியாக இறந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

“ ஜெயலலிதா 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் ஒரு பகீர் செய்தியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியிருந்த நிலையில், இதற்கு அமைச்சர் ஜெயகுமார் மறுப்பு தெரிவித்தார். அதேபோல ஜெயலலிதா இறந்தது தொடர்பாக தவறான தேதி, நேரம் பரப்பப்படுகிறது. ஜெயலலிதா டிச.5-ம் தேதிதான் இறந்தார். அவருடைய இறப்பு அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் பின்பற்றித்தான் அறிவிக்கப்பட்டது’ என்று அப்போலோ மருத்துவமனை தரப்பு மறுத்தது.

இவர்கள் இப்படி, மறுப்பு தெரிவித்து வரும் வேலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திவாகரன் சொல்வது சரிதான் என்பதைப்போல ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என கூறுவது ஒருவேளை சசி குடும்பம் சொல்வதை நியாயப் படுத்துகிறாரோ அமைச்சர்? என அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளார்.

click me!